தமிழ்மணவாளனின் 'காலச்சிற்பம்' எனக்கு இரட்டை அனுபவங்களைத் தருகிறது. அது எனக்குப் பருக அமிழ்தம் தருகிறது. நஞ்சு முறிக்கும் மூலிகைகளை என்னுள் நட்டுவைக்கிறது. வாசிப்பு அனுபவத்தில் கவிதை தருகிற பல்முனைப்பட்ட அனுமானங்களை, ஊகங்களை, காற்றை, வெளியை, தீயை, சமுத்திரத்தை, புல்லின் இதழ்களை என, எல்லாவற்றையும் கவிதையே எனக்குத் தருகிறது. இத்தகையதான இன்பத்தை இந்தப் புத்தகம் நெடுகிலும் எனக்குத் தமிழ்மணவாளன் தந்துகொண்டே இருக்கிறார்.
பரந்து விரிந்த இந்த மனம் என்னும் அருஞ்சுனையின் தீராத, அள்ளக் குறையாத நன்னீரைப் பருகத் தந்துகொண்டே இருக்கிற புத்தகம் தமிழ் மணவாளனின் காலச் சிற்பம். சொற்களைச் செதுக்கும் ஓர் உளியின் சத்தம் புத்தகம் எங்கும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. வாசித்து முடித்தபின்னும் அதன் இசையை, தமிழ்மணவாளனின் புத்தகம் இசைத்துக்கொண்டே இருக்கிறது. செதுக்கிய பின்னும் காலத்தின் கரங்களில் தன்னை ஒப்படைத்து, தமிழ்மணவாளனின் கவிதை தன்னை உருவேற்றிக்கொண்டே இருக்கிறது.
காலச் சிற்பம் நிலைத்திருக்கும்.
-பாரதி கிருஷ்ணகுமார்
இயக்குநர், எழுத்தாளர், சொற்பொழிவாளர்
Be the first to rate this book.