பண்டிட் விஷ்ணு ஷர்மா கற்றுக் கொடுக்க புது வழி ஒன்றைக் கண்டுபிடித்தார். அது பஞ்சதந்திரக் கதைகள். தன் மாணவர்களுக்கு வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கதைகளின் மூலம் கற்றுக் கொடுத்தார். இவை எல்லோரும் ரசித்துப் படிக்கும்படியும் அமைந்தன. இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகும், பல்வேறு மொழிகளிலும் கலாச்சாரங்களிலும் இன்னும் இக்கதைகள் படிக்கப்பட்டு வருகின்றன. மனிதனின் முட்டாள்தனத்தையும் இரக்கமற்ற குணத்தையும் இக்கதைகள் வெளிச்சம்போட்டு காட்டுவது மட்டுமல்லாமல் ‘நண்பர்களைப் பார்த்துத தேர்ந்தெடு’ என்பது போன்ற சில அறிவுரைகளையும் வழங்குகிறது.
Be the first to rate this book.