புலியின் கண்களில் காடு ஒளிர்கிறது என்ற போர்ஹேயின் வரிகளைப் போலவே இவரது கவிதைகளும் வனத்தின் பசிய ஒளிர்தலின் ஊடாக மிளிர்கிறது. தொல்குடி தொடங்கி சமகாலம் வரை யிலான பண்பாட்டின் குலக்குறி காடுகளில்தான் ஒளிந்து கிடக்கிறது. மானுடத்தின் ஆதிஇருப்பான அடவியின் பச்சைய நிழலென குளிராய் சுவிகிறது இவரின் கவிதைகள். காடுகளைப் பற்றி மட்டுமே பேசும் இம்முழுத் தொகுப்பும் கவிதைக் களத்தில் புதுத் தடம்.
Be the first to rate this book.