அரபியில் 'மஸ்ஜித் என வழங்கப்படும் சொல்லுக்கு தமிழில் 'பள்ளிவாசல்' என்று கூறுகிறோம். இயல்பில் மஸ்ஜித் என்றால் 'இறைவனைத் தொழுமிடம்' என்று மட்டுமே அர்த்தம். சங்ககாலம் தொட்டு 'பள்ளி' என்ற சொல்லினை சமண.பௌத்த துறவிகள் உறங்குமிடம், கல்வி கற்பிக்குமிடம், துறவிகளின் தங்குமிடம் அல்லது அவர்கள் தொழுமிடம் என்ற பதங்களில் நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். கிபி.ஏழாம் நூற்றாண்டு முதலாகவே தமிழக மண்ணில் இஸ்லாம் பரவி வருகிறது என்பதன் ஒற்றை அடையாளமாக அதே தொழுமிடம் எனும் பழஞ்சொல்லினை வலியுறுத்தி தமிழ் முஸ்லிம்கள் தங்களது இறைவணக்கம் செய்யுமிடத்தை இன்றளவும் 'பள்ளிவாசல்' என்றே கூறி வருகின்றனர்.
Be the first to rate this book.