அமெரிக்கரின் வாழ்க்கை எப்படி இளமையின் ஜீவத்துடிப்பும், விண்ணையும் விண்டுபார்க்க வேண்டும் என்ற குறுகுறுத்த ஆவலும் நிறைந்து காணப்படுகிறதோ, அப்படியே அவர்களுடைய இலக்கியமும், பல துறையிலும் வளம் பெற்று வலுவுடனும் வனப்புடனும் விளங்குகிறது. இலக்கியத் துறையில் நாவலும், சிறுகதையும் மற்றெந்த நாட்டில் உள்ளதைக் காட்டிலும் வெகுதூரம் வளர்ச்சியடைந்துள்ளன. அதற்குக் காரணம், அந்த நாட்டின் செல்வ வளர்ச்சியும், அதை ஒட்டி வளர்ந்துள்ள கல்வி வளர்ச்சியுமாகும்.
இந்தத் தொகுதியில் அடங்கியுள்ள எட்டுச் சிறுகதைகளும் அவர்களுடைய வாழ்க்கைப் பிரச்னைகளைப் பலவிதக் கோணங்களிலிருந்து நோக்கும் உணர்ச்சிச் சித்திரங்களாகவும், அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் உயிர்ச் சின்னங்களாகவும் அமைந்துள்ளன.
Be the first to rate this book.