ஜப்பானியப் பழம்பாடல்களை அறிந்துணர்ந்து சொல்லவும்’ தகவல்களைச் சரியாக எடுத்துரைக்கவும் (Authentic and Authoritative) கமலக்கண்ணனைப் போல் வல்லவர் மிகச்சிலரே இருத்தல் கூடும். கவிதைகளின் ஜப்பானிய வடிவம், கவிஞரின் வரலாறு, பாடலின் பொருள் ஆகியவை விளக்கப்பட்டபின் தமிழ் மொழிபெயர்ப்பு வெண்பா வடிவில் தரப்பட்டுள்ளது. ஜப்பானிய இலக்கியம் இயற்கையையும் மனித உணர்வையும் விட்டு ஒருபோதும் விலகி நிற்பதில்லை. நம் சங்கக் கவிதையின் நுட்பமும் அதுதானே! எனவே, அடித்தளத்தில் இரண்டும் தோழமை கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிக்கொண்டே செல்கிறார். பழம்பெரும் பண்பாடுகள் இரண்டையும் சந்திக்க வைத்துச் சிந்திக்க வைக்கிறார் இந்நூலாசிரியர்ச பேராசிரியர் .
-சிற்பி பாலசுப்ரமணியம்
Be the first to rate this book.