மேற்குலகை நான் வெறுக்கிறேன். நான் கொண்டாட்டத்துக்கு உரியவளாக மேற்கில் நடத்தப்படுகிறேன். அரசுத் தலைவர்களையும் தெருவில் போகிற மனிதர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். மனிதத் துயரம் என்பது உலகெங்கிலும் ஒன்றுதான் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். உணர்வுபூர்வமாகவோ பொருளாதார அடிப்படையிலோ மேற்கில் வாழ்வது எனக்குச் சாத்தியமில்லை. ஒவ்வொரு நாளும் நூறு முறை நான் இறக்கிறேன், எனினும் மேற்கில் அந்நிய நிலத்தில் வாழ்வதற்கே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
- தஸ்லீமா நஸ்ரின்
இவர் வங்காளதேசத்திலுள்ள மைமன்சிங் நகரில் 1961 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது எழுத்துகளின் மீதான அடிப்படைவாதிகளின் தாக்குதலை அடுத்து அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பிறந்த நாடான வங்காளதேசம் அவரது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க மறுத்துவிட்டது. அவர் அடைக்கலம் புகுந்த மேற்கு வங்காள அரசு அடிப்படைவாதிகளுக்குப் பணிந்து இந்திய அரசின் அனுசரணையுடன் கல்கத்தாவிலிருந்து அவரை ராஜஸ்தானுக்குக் கடத்தியது. அவர் வாழ விரும்பிய இந்தியாவிலிருந்து இந்திய அரசு 2008 ஆம் ஆண்டு அவரை நாடு கடத்தியது. தஸ்லீமா நஸ்ரின் அதனது நிஜமான அர்த்தத்தில் நாடற்றவர். நாட்டுக்கு நாடு நாடோடியாக அலைந்து கொண்டிருக்கும் அகதி.
Be the first to rate this book.