இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளின் கலங்கரை விளக்கமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இஸ்ரோ திகழ்கிறது.
உலகில் எந்த நாடும் செய்யாத அளப்பரிய சாதனைகளை சந்திரயான்-3 திட்டம் மூலம் இந்தியா நிகழ்த்தி காட்டியுள்ளது.
விண்வெளிக்கு அப்பால் பேரிடர் மேலாண்மை, வானிலை முன்னறிவிப்பு. விவசாயம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றுக்கு இஸ்ரோ உதவுகிறது.
இஸ்ரோ உலகின் மிக பெரும் விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஆறாவதாக உள்ளது.
இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு உலக விண்வெளி விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 தினத்தை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது!
Be the first to rate this book.