இஸ்லாமிய தமிழ் இலக்கிய உலகில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் கதை, கவிதை, கட்டுரை என்று ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துறை சார்ந்து எழுதிவரும் வேளையில் சகோதரி நஸ்ரத் ரோஸி அவர்கள் கட்டுரையாளராக, கதைசொல்லியாக, மொழிபெயர்ப்பாளராக, பத்தி எழுத்தாளராக, தேடல் மிக்க வரலாற்று ஆய்வாளராகப் பல பரிமாணங்களில் வலம்வருபவர்.
அவரது சிந்தனையில் உருவாகி இதற்குமுன் வெளிவந்த புத்தகங்கள் அனைத்தையும் விட இஸ்லாமியப் பொற்காலம் பாகம் 2 மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. உலகம் முழுவதும் முஸ்லிம்களின் வரலாறும் அதனுடன் தொடர்புடைய அடையாளங்களும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்துவரும் வேளையில், இன்றைய நவீன உலகில் மக்கள் பயன்பாட்டிலுள்ள பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னோடி முஸ்லிம்கள் குறித்த தகவல்களை மிகுந்த சிரமப்பட்டுத் தேடி ஆதாரத் தரவுகளுடன் இந்தப் புத்தகத்தின் ஆவணப்படுத்தியுள்ளார்.
பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்கள் என ஐரோப்பியர்களின் பெயரையே இணைய ஊடகங்கள் பதிவு செய்து வைத்துள்ள நிலையில் அதற்கு முன்னோடிகள் இஸ்லாமிய அறிஞர்கள் என்பது இந்தப் புத்தகத்தின் மூலம் நஸ்ரத் ரோஸி வெளிக்கொணர்ந்துள்ளார்.
- குளச்சல் ஆசிம்
Be the first to rate this book.