தமக்கு உரிய இடத்தில் பிறர் நுழையாது தடுத்திட முள்வேலி போடுகிறார்கள். இடத்துக்குப் போடப்பட்ட முள்வேலியைப் பற்றிய கதை அல்ல இது: இதயத்துக்குப் போடப்பட்டுவிடும் முள்வேலி பற்றியது. கருத்துக்களின் தோற்றம், மாற்றம், வகை, வடிவம், விளைவு, அவை ஏற்படுவதற்கான சூழ்நிலை ஆகியவை பற்றிய விளக்கமளிக்கும் இலக்கியம் 'மனிதத் தன்மை'யின் புனிதத்தை விளக்கிடும் தூய்மை மிக்க கருத்தோவியம்....
....ஆடலையும் பாடலையும். அணிவகுப்புகளையும், வெற்றி வஊர்வலங்களையும்.வெறியாட்டத்தையும் பலமுறை காட்டிய பாரிஸ் பட்டினம் அன்று ஒரு புதிய பயங்கரத் தோற்றத்தைக் காட்டி நின்றது. மன்னனைத் தூக்கிலிட மக்கள் கட்டளையிட்டுவிட்டார்கள். மக்கள் ஆணையை நிறைவேற்ற வீரர், அழைத்து வருகிறார்கள் மன்னனை. மன்னன் காணும் மூன்றாவது ஊர்வலம் கடைசி ஊர்வலம்! வெட்டுப் பாறை! வண்டி நின்றது. மன்னன் அமைதி குலையாமல். 'சாகத் தயாரானான். மக்களிடம் 'நான் குற்றமற்றவன்' என்று கூறத் தொடங்கினான்! முரசுகள் ஆர்ப்பரிக்கட்டும் என்று உத்தாவிட்டான் அதிகாரி. மன்னன் பேசியது நின்றது; வெட்டரிவாள் கழுத்தில் விழுந்தது. துண்டிக்கப்பட்ட தலையை ஒரு போர் வீரன் தூக்கிக் காட்டினான், அங்கு இருந்தோருக்கு. வாழ்க குடி அரசு!' என்று கூறினர் மக்கள் கலைந்தனர்; மன்னன் கதை முடிந்தது.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.