இந்தச் சிறுகதைகள் பல உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். எனது அவதானிப்புகள், பல நாடுகளைச் சேர்ந்த பெண்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் என்னை பெரும்பாலான சிறுகதைகளை எழுத வைத்தன. சிலருக்கு இவற்றைப் படிக்க சங்கடமாக இருக்கலாம். எனது எழுத்துகள் வரலாற்றின் சான்றுகள், அந்த வரலாற்றில் நான் ஒரு பகுதியாக இருக்கிறேன். இந்தத் தொகுப்பு பெண்களின் எழுத்துகளைப் படிக்கவும் தேடவும் விரும்பும் இளம் தலைமுறையினரைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.
- ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் இது வரை 25 நூல்களை எழுதி இருக்கிறார். மானுடவியலில் முதுகலைப் பட்டமும், திரைப்படைத் துறையில் பி.ஏ. பட்டமும் பெற்றவர். லண்டனில் நீண்ட காலமாக வாழ்கிறார். பல சமூக நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர். சமூகம், அரசியல், குடும்பம் சார்ந்த பல கதைகளை வித்தியாசமான தளங்களின் பார்வையில் எழுதியுள்ளார்.
Be the first to rate this book.