அவளை நாங்கள் காதலித்தோம் -இதற்குள் எல்லாமே அடங்கும்! மனிதனுக்கு தன் காதலை யார் மீதாவது செலுத்தவேண்டி இருக்கிறது; சில நேரங்களில் அதனால் அவன் உடைந்து போனாலும், அவனுக்கு அவப்பெயர் ஏற்பட்டாலும், காதலிப்பவருக்கு உரிய மரியாதை செலுத்தாமல் அவர் வாழ்வை கெடுத்துவிட நேர்ந்தாலும் கூட, அவனால் காதலிக்காமல் - இருக்க முடிவதில்லை. நாங்கள் நேசிக்க வேறு யாரும் இல்லாததால் தன்யாவை காதலிக்க வேண்டியிருந்தது.
Be the first to rate this book.