கதைகளை வாசிப்பது, எப்போதும் எனக்கு கிணற்றுத் தண்ணீரை மொண்டு குளிப்பது மாதிரி. குளிக்கக் குளிக்க அலுப்பு தீரும். ஆனால், ஆசை தீரவே தீராது.
மாசி மகத்தன்று இருளர் இன் முக்கள் மாமல்லபுரம் கடற்கரையோரத்தில் சேலைகளால் குடில்கள் அமைத்து அங்கு தங்குவர். பின்னர், அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் அவர்களது குலதெய்வமான பச்சையம்மனையும், கன்னியம்மனையும் கடற்கரை பிடி மண்ணில் செய்து, படையலிட்டுக் கொண்டாடுவார்கள். இருளர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இந்தொகுப்பில் என்னை கூடுதலாகக் கவர்ந்தது கதை சொல்லும் உத்தியும், அதற்கு அவர் கைகொண்ட மொழியும்தான். இவரது இலகுவான் மொழி கட்டுமானம் அடுக்கடுக்காக அடுக்குமல்லிப் பூப்பது மாதிரி நிறைய லேயர்களைக் கொண்டிருக்கிறது.
-மாளா பாஸ்கரன்
Be the first to rate this book.