பதற்றம் மிகுந்த நாட்களைச் சொல்லும் இந்த அனுபவக் குறிப்புகள் ஒரு நாவலுக்கு நிகரான நிறைவையும் செறிவையும் அளிக்கின்றன. இக்குறிப்புகளின் எழுத்துநடை மிகவும் எளிமையானது. உள்ளதை உள்ளபடி சொல்வது. எனவேதான் இதனுடன் இயல்பாக ஒன்றிவிட முடிகிறது. உத்தரவாதமற்ற அன்றாடத்தின் அபாயங்களுக்கு நடு வேயும் மனிதர்களைக் கவனித்து அறிந்து புரிந்து கொண்டு அவர்களுடனான உறவைப் பேணும் தன்மை வியக்க வைக்கிறது. நாடும் மொழியும் இனமும் வேறானாலும் அவர்களிடமுள்ள மேன்மைகளைக் காணும் சந்தர்ப்பங் களும் வாய்க்கின்றன. சிற்சில இடங்களில், தருணங்களில் மனிதர்களுக்கே உரிய கீழ்மைகளும் தலையெடுக்கின்றன. எதன் மீதும் யார் மீதும் எந்தவிதமான புகாரோ விமர்சனமே இல்லாமல் மனிதர்களின் இயல்பு இத்தகையது என்ற சமநோக்குடன் அனைவரையும் அணுகும் விதமும் முக்கியமானது
- எம்.கோபாலகிருஷ்ணன்
Be the first to rate this book.