“பெண்கள், ஆண்களுக்குச் சரிநிகரான உடன்பிறப்புகள்” என்றார்கள் நபிகள் நாயகம். அவரவரின் தனித்தன்மைகளைப் புறக்கணிக்காமல், பூரணமான ஆண்-பெண் சமத்துவத்தைச் சாதிப்பதற்கான அடிப்படைக் கோட்பாட்டை மேற்கூறிய நபிமொழி வழங்குகிறது. எனினும், வரலாற்றில் அது நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தில் நிறைய இடைவெளிகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்நிலையில், இந்நூல் திருக்குர்ஆன், நபியின் முன்மாதிரி ஆகியவற்றின் ஒளியில் இவ்விவகாரம் குறித்து மிக விரிவாகக் கலந்துரையாடி, இடைவெளிகளை நிரப்புகிறது. இஸ்லாமிய நிலைப்பாடு என்பதாகப் பலரும் குழப்பிக்கொண்டுள்ள பல விசயங்களையும், அவை சமூக வழக்காறுகள் மட்டுமே என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் அந்தஸ்து பற்றி ஏராளம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அது நபியவர்களால் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற விவரங்களை வெகு குறைவாகவே அறிந்துவைத்துள்ளோம். எந்தவிதக் கூடுதல் குறைவும் இல்லாமல் நபியவர்கள் உருவாக்கித் தந்த அந்தப் பாதையை இந்நூல் தெளிவுற வரைந்துகாட்டுகிறது.
Be the first to rate this book.