பொருளாதார அடிமைத்தனத்தை விடவும் கொடுமையானது. தான் யார் என்று தெரியாமலேயே சமூகம் தனக்காகச் செதுக்கி வைத்த பிம்பங்களை மெய்யென்று நம்பி வாழும் அந்த அகத் தனிமையின் அடிமைத்தனம். பல நேரங்களில் புறத்தே நிகழும் வேட்டைகளை விடவும், விழிப்புணர்வற்ற தன்மையினால் ஒரு மனிதன் தனக்குத் தானே இழைத்துக்கொள்ளும் துரோகமே மிகப்பெரியது. இவ்வாறு அடையாளங்களை இழந்து, முகமூடிகளைத் தரித்து. காலத்தின் போக்கில் தங்களைச் சிதைத்துக் கொள்ளும் மனிதர்களின் 'இருப்பு' குறித்த கேள்வியே இந்தக் குறுநாவல். வேட்டையாடுபவர் யார் என்று வெளியுலகில் தேடுவதை விடுத்து. நாம் எப்போது, எப்படி நமக்கு நாமே இரையாகத் தொடங்குகிறோம் என்ற அந்த மெல்லிய விளிம்பை நோக்கிய பயணமே இந்த 'இரை.
Be the first to rate this book.