லீதல்
லீதல் ஆற்றின்
நீரைப் பருகிவிட்டேன்
இன்னும் சில
நிமிடங்களில் முழு
மறதியுண்டாகும் இந்த
வாழ்வை மறந்திடுவேன்
உலகமும் என்னை
மறக்கும் சந்தேகமில்லை
எவ்விதச் சலனமுமின்றி
மறதிக்குப் பழக்கிவிட்டால்
இறப்பொன்றும் அத்துணைத்
துயரமான காரியமில்லை
மறத்தலையும்
இறத்தலையும் மயிலிறகால்
பிணைத்து வைத்திருக்கும்
உன்னைத் தான்
முதலில் மறதிக்குப்
பழக்குவேன் இறத்தல்
என்னைப் பழக்கட்டும்.
Be the first to rate this book.