மரணம் உடன்பிறந்த நிஜம். இந்த நிஜத்தை ஏற்க மறுக்கிற மனம் பயத்தில் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறது. மரணம் வாழ்க்கையின் உச்சம். மரணம் நம் தோழன். என்றோ வர இருக்கும் இறுதித் தோழன். அவனுடன் அன்போடு கைகுலுக்கி நிறைவு பெற இந்நூல் உதவலாம்.
YouTubeல் கவிஞரின் பாடலைக் கேட்க...
சந்தியா நடராஜன் என்றழைக்கப்படும் முத்தையா நடராஜன் 13.01.1960இல் காவிரிக்கரை நகரமாகிய மாயவரத்தில் பிறந்தவர். சென்னை சுங்கத்துறையிலும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறையிலும் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் ஒரு கவிதைத் தொகுப்பும் 3 கட்டுரைத் தொகுப்புகளும், 10 மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியிட்டுள்ளார். இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள 'கலைஞர் மு.கருணாநிதி வரலாறு' என்ற நூலுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
Be the first to rate this book.