நாம் இல்லாவிட்டாலும் எல்லாம் நடக்கும் இயற்கை பார்த்துக்கொள்ளும்
-என்பதில் நம் அகம் மௌனத்தை முழுவதுமாய் நிரப்பிக் கொள்கிறது. எதையும் சொல்வதற்கில்லை. எல்லாம் அடங்கிவிடுகிறது. ஒவ்வொரு பக்கத்திற்குமே இப்படி வரிகள் ஒவ்வொன்றும் ஜென் கதையாக விரிகின்றன.
அருணாச்சலசிவா என்ற புனைபெயரில் இயங்கி வரும் இவரது இயற்பெயர் ரவிசங்கர். நாகை காரோணம் பிறந்த ஊர் என்றாலும் வசிப்பிடம் சென்னை. இயந்திரவியல் பொறியியல் பயின்றவர். ஆன்மீகப் பற்று கொண்டு இவர் பல நூல்களை எழுதியுள்ளதை கவிஞர்கள் அறிவர். ஜென் சிவ சிவ ஜென் என்பது நானறிந்த ஒன்று. எதையும் நுட்பமாக பதிவு செய்யும் இவரது சொற்கள் எளிமையானவை. அலங்காரமற்றது. நேரடித் தன்மையும் நுட்பமும் கொண்டவைகள். இந்திய ஜென் கதைகள் நிச்சயம் இவர் எழுத்துகளின் ஒரு மைல் கல்லாகும்.
அன்புடன்
காவனூர் சீனிவாசன்
Be the first to rate this book.