இந்தியாவில் கம்யூனிச இயக்கம் தோன்றி நூறாண்டு காலம் ஆகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் தோன்றிய இவ்வியக்கம். விடுதலைப் போராட்டக் காலந்தொட்டே பிற இயக்கங்களோடு ஒன்றுபட்டு நின்றும் செயலாற்றி வருகிறது: தனக்குள்ளேயே பிளவுபட்டு நின்றும் செயலாற்றி வருகிறது. புரட்சிகரமான இயக்கம் எனினும் தற்காலத்தில் ஜனநாயகப் பாதையில் பயணித்து வருகிறது.
இந்த நூறாண்டு கால வரலாற்றின் தொடக்கத்தில், இந்த மண்ணில் கம்யூனிச இயக்கத்தை வளர்த்தெடுத்த ஒன்பது முன்னணித் தலைவர்கள் பற்றிய முக்கியத் தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சிக் காலத்தில் பயணிப்பவர்களாகிய நாம், இயக்க முன்னோடிகளின் அந்தக் காலச் சூழலில் நின்று அவர்களின் செயல்பாடுகளை வாசித்தறியும்போது பெருவியப்பும் திகைப்பும் நம்முள் உண்டாகிறது.
'இயக்க முன்னோடிகளை, அவர்களின் வெற்றிகளை. தடுக்கித் தடுமாறிய இடங்களை அனுபவத்திற்காக எடுத்துக் கொள்வது. அரசியல் பயிலும் மாணவர்களுக்கு அவசிய மானதாக இருக்கும்' என்கிறார் நூலாசிரியர்.
-பதிப்பாசிரியர்
Be the first to rate this book.