இந்தியாவில் பேசப்படும் மொழிகள் வேகமாகக் குறைந்து வருவது நிச்சயமாக ஆரோக்கியமான மாற்றம் அல்ல. பிரதேச மொழிகளைப் பேசிக் கொண்டிருந்த மக்களை, ஹிந்தி மொழியைக் கற்க வைத்து அதிலேயே சிந்திக்க வைப்பதன் வழியாக அவர்களது மரபார்ந்த செய்திகளை மறக்கச் செய்துவிடுகிறோம். கடந்த காலத்தைக் குறித்த செய்திகள், ஒவ்வொரு நிலத்திற்குமான மருத்துவமுறைகள் என மொழிக்குள்ளிருக்கும் அறிவை ஆவணப்படுத்த வேண்டியது நம் கடமை. பிரதேச மொழி இலக்கியங்கள் தொடர்ந்து வளமோடு இயங்கும்போதுதான் அசலான இந்திய இலக்கியம் என்ற முழுமையை நாம் அடையாளம் காணமுடியும். வெவ்வேறு அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடிய புனைவுகளாயினும் சில அடிப்படைக் குணங்கள் எப்படி நம்மை ஓர் எல்லைக்குள் கட்டமைத்திருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளலாம்
Be the first to rate this book.