இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற வரிசையில், சிறுகதை மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான், தமிழ்ச் சிறுகதையின் தந்தை, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி என்றெல்லாம் போற்றப்படும் புதுமைப்பித்தனது வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
புதுமைப்பித்தனைப் பற்றி அறிமுகப்படுத்தி, அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துரைப்பதோடு,சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என அவரது படைப்புகள் குறித்தும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. மேலும், புதுமைப்பித்தனைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களையும், புதுமைப்பித்தனின் செல்வாக்கையும் அவரது படைப்புகளைப் பற்றியும் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.
'வெற்றிலை, காப்பி, பேச்சுத் துணைக்கு ஆள் இத்தனையும் இருந்து விட்டால், அவருக்குச் சாப்பாட்டில் கூட நாட்டம் செல்லாது. 'பேனாவை எடுத்து விட்டால் அந்தப் பேனாவுக்கு எங்கிருந்தோ ஒரு அசுரவேகம் வந்து புகுந்துவிடும்'. 'புதுமைப்பித்தன் கையெழுத்து கண்ணில் ஒற்றிக் கொள்ளக் கூடிய பூப் போன்ற எழுத்துக்கள் அல்ல. என்னவோ சுருக்கெழுத்து எழுதிய மாதிரி இருக்கும். இவை போன்று புதுமைப்பித்தனைப் பற்றிய பல சுவையான செய்திகளை இந்நூல் கொண்டுள்ளது.
Be the first to rate this book.