திறனாய்வு என்றால் என்ன என்று அறிமுகப்படுத்தித் துவங்கும் இந்நூல், எவ்வாறு திறனாய்வு செய்வது என்பதை விளக்கிச் செல்கிறது. பின்னர், ஜெயமோகன் அவர்கள் எழுதிய குறுநாவல், குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள், காப்பியங்கள், கம்பராமாயணம், ஆண்டாள், மாணிக்கவாசகரின் குயில் பத்து முதலான பல்வேறு இலக்கியங்களைப் பற்றிய பல்வேறு ஆய்வியல் முறைகள் இந்நூலில் காணப்படுகின்றன. இவற்றை அழகியல் நோக்கு, உளவியல் நோக்கு, தொன்மவியல் நோக்கு, சுற்றுப்புற சூழலியல், மேலாண்மையில், நீர் மேலாண்மையியல், உணர்வு மேலாண்மை, மானிடவியல் நோக்கு, அறவியல், நாட்டுப்புறவியல், எதிர்காலவியல், ஒப்பாய்வியல், பொருளியல் என்று குறிப்பிடலாம். "புறநானூற்றில் பொருளியல் சிந்தனைகள்", "குறுந்தொகையில் சுற்றுப்புற சூழலியல்" "பத்துப்பாட்டில் நீர் மேலாண்மையில்" என்றவாறு இந்நூலானது பல்வேறு நோக்கிலான ஆய்வு முறைகளைப் பற்றிப் படித்து அறிந்து கொள்வதற்கும், இந்த ஆய்வு முறைகளில் அமைந்த பல்வேறு இலக்கியச் சுவைகளைப் படித்து இன்புறுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
Be the first to rate this book.