கும்பமேளா விழாக் கூட்டத்தால்
பூமியின் புண்ணிய நதி
மனித பாவங்களைச் சுமந்து
கலங்கப்பட்டுக் கண்ணீர் வடிக்கிறதாம்.
என் காதலே!
உன் பாதம் பட்டால்
கடல் நீரும் குடிநீராகும் என்பது
எனக்குத் தெரியும்.
கலங்கப்பட்டுக் கிடக்கும் கங்கை நீரை:
உன் கால் பதித்துப் புனித நீராய்,
புதுப் புனலாய்ப் புதுப்பிக்க வருவாயா!
Be the first to rate this book.