இந்தியாவில் தொடர்ந்து சர்ச்சையைச் சந்தித்துவரும் ஒரு விசயம் இட ஒதுக்கீடு ஆகும். இட ஒதுக்கீட்டுக்கான அவசியம். அதன் பின்னணி, இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த வரலாறு, அது சந்தித்த சந்திக்கின்ற சவால்கள், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் சூழ்ச்சி, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் குறித்தான அம்பேத்கரின் சிந்தனைகள், இந்திய விடுதலையில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய எழுச்சியின் தாக்கம் உள்ளிட்டவற்றை விரிவாகவும் வலுவான வாதங்களோடும் நூலாசிரியர் எடுத்துரைகிறார்.
இட ஒதுக்கீடு என்பது மறுக்கப்பட்ட வாய்ப்பை வழங்கும் நுழைவாயில் மட்டுமே. அது தகுதியைத் தீர்மானிப்பது அல்ல என்ற விளக்கமும் இட ஒதுக்கீட்டால் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களே பயனடைகிறார்கள் என்பதற்கான மறுப்பும் மிகச் சிறப்பானவை. இட ஒதுக்கீடு குறித்த தெளிவான விளக்கங்களையும் அரசியல் விவாதங்களுக்கான தரவுகளையும் தருகின்ற நூல்.
Be the first to rate this book.