ஆளில்லாத வீடுகள், கண்டெடுக்கப்படும் செய்வினைத் தகடுகள், சுவர்களின் வளரும் அரக்க நிழல்கள், மறைக்கப்பட்ட நிர்வாண பொம்மைகள், தூங்காத நகரங்கள், அந்தரங்கத்தைக் கண்காணிக்கும் கண்கள், அழிவுச் செய்திகள், இறந்த முத்தங்கள் என நவீன வாழ்க்கையின் பிசுபிசுக்கும் இருளைத் தொட்டுப் பார்க்கின்றன மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள். அவை வன்முறையின் அழகியலை உக்கிரமாக வெளிப்படுத்தியபடி வாழ்வின் நகக் கணுக்களில் கூர்மையாகப் பதியும் குரூரங்களைக் கடந்து செல்லப் போராடுகின்றன.
Be the first to rate this book.