முனைவர் ஆ.துளசேந்திரன் அவர்கள் தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் இணை பேராசிரியர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) பணியாற்றி வருகிறார். பல்வேறு கல்வெட்டுகளையும் தொல்லியல் வரலாற்று சின்னணங்களையும் கண்டறிந்துள்ளார். மேலும் கல்வெட்டு, தொல்லியல், கலை வரலாற்று ஆய்வுகளில் தொடர்ந்து தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
மயிலாடும்பாறை, தாண்டிக்குடி, நாகப்பட்டினம், தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளிலும் பங்கெடுத்துள்ளார். கல்வெட்டு, வரலாறு கோயிற்கலை, தொல்லியல், சமயம், அரசியல் தொடர்பான ஏழு ஆய்வு நூல்களையும், 50-க்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார். இவரது ஆய்வு நெறியில் 18 பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். 60-க்கு மேற்பட்டோர் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார்கள்.
இவரது கல்வி மற்றும் ஆய்வுச் செயல்பாடுகளைப் பாராட்டும் வகையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருதும் கிடைத்திருக்கிறது.
Be the first to rate this book.