கடுமையான தணிக்கை நிலவுகிற சூழலில் எழுதப்பட்டவை சிம்போர்ஸ்க்காவின் கவிதைகள். நூறு முறை இந்தக் கவிதைகளைப் படிக்கலாம். பீததோவனின் சந்கீதத்திலுள்ள வெம்மையைக் கொண்டிருக்கின்றன இந்தக் கவிதைகள் என்ற உண்மை. பீததோவனின் இசை தரும் அதிர்வில் அந்த இசையின் துகள்களாகத் தம்மை இழந்தவர்களுக்குப் புரியும்.
- கோவை ஞானி
விஸ்லோவா சிம்போர்ஸ்க்கா
1923 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள் மேற்கு போலந்திலுள்ள கார்னிக் எனும் நகரத்தில் பிறந்தார். சிம்போர்ஸ்க்கா 1996 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் விருது பெற்றவர். அவரது கவிதைகள் அனைத்துமே தணிக்கை முறைக்குள் சென்றுதான் வெளியுலகைத் தரிசித்தன. அவரது கவிதைகள் மிக எளிமையானவை. நேரடியானது போலத் தோற்றம் தரும் அவரது கவிதைகளுக்குள் எப்போதுமே நேரடியானதல்லாத விஷமத்தனமான எதிர்ப்புக் கருத்துகள் பொதிந்திருக்கும்.
Be the first to rate this book.