பி.ஏ வரலாற்றுப் பட்டதாரி ஃவாஹிமான எனக்கு பத்தாம் வகுப்பில் தான் முழுமையாக ஹிட்லர் அறிமுகமானார். படித்தவுடன் அப்போது மனதில் பதிந்துபோனது அவருடைய குறுவரலாறு, பின்னாட்களில் கல்லூரி மற்றும் எனது ஆர்வமிகுதியின் காரணமாக, அவருடைய முழு வரலாற்றைத் தெரிந்து கொண்டேன்.
20ம் நூற்றாண்டின் எமன் வடிவம் அடால்ஃப் ஹிட்லர்.வரலாற்றின் இருண்ட இரண்டாம் உலகப்போரின் பக்கங்களுக்கு சொந்தக்காரரான இந்த ஹிட்லர்தான், ஜெர்மனிக்கு விடிவெள்ளியாகத் தெரிந்தார் என்பதை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாது. வதைமுகாம்களை உருவாக்கி யூத இனத்தையே அழித்த ஹிட்லர். ஒருமுறை கூட தான் உருவாக்கிய வதைமுகாம்கள் பக்கம் எட்டிப் பார்த்தது கூட கிடையாதாம்! மனிதர்களை வெறுத்த ஹிட்லர் நாய்களை நேசித்தார். இந்த கொடுங்கோலரின் வாழ்க்கையிலும் காதலும், கல்யாணமும் நடந்தது. ஆரிய ஜெர்மானியர்கள் உயர்ந்தவர்கள் என்று கருதிய ஹிட்லர் பிறப்பால் ஒரு ஜெர்மானியர் கூடக் கிடையாது. ஆஸ்திரியர்! தனக்கு தன் சொந்த நாட்டில்கூட எதிரிகள் இருக்கக் கூடாதென முடிவெடுத்து, வெறும் மூன்றே நாட்களில் ஆயிரக்கணக்கான பேரைக் காவு வாங்கினார்.
தானே ஜெர்மனி! ஜெர்மனியே தான் என்று மக்களின் மனதில் தன்னைப் பதித்த ஹிட்லரின் வாழ்க்கை, அப்பாவி மக்களின் குருதியால் எழுதப்பட்ட ரத்த சரித்திரம்! மொத்தத்தில் இந்த மனிதகுல வரலாற்றில் சிக்கலான, அதேசமயம் பெரும் ஆபத்தான ஹிட்லர் வரலாற்றின் ஒரு கேள்விக்குறி என்றால் அது மிகையாகாது.
Be the first to rate this book.