பிரபல சினிமா நடிகர் சிவகார்த்திகேயன், 'ராட்சசன்' திரைப்படத்தால் அடையாளம் பெற்ற இயக்குநர் ராம்குமார், ஸ்டாண்ட் அப் காமெடியில் தனி முத்திரை பதித்துவரும் அலெக்சாண்டர் பாபு, தமிழ்நாட்டின் நவீன ஓவிய அடையாளமாக மாறிவிட்ட ஓவியர் மருது, உலகெங்கும் தன் எழுத்தால் அறியப்படும் எழுத்தாளர் பாமா ஆகியோரின் பேட்டிகள் இந்த மலரின் பன்முகத்தன்மைக்கு ஓர் அடையாளம்.
சிறிய ஊராக இருந்தாலும் தமிழ்நாட்டின் இலக்கிய நகரமாக அறியப்பட்டுள்ள கோவில்பட்டி குறித்து உதயசங்கரும், தேடித்தேடி வாசிக்கப்பட்ட அந்தக் கால தீபாவளி மலர்கள் குறித்து ஒரு நாஸ்டால்ஜியா கட்டுரையை எழுத்தாளர் கமலாலயனும் எழுதியுள்ளார்.
தீபாவளி மலர் என்று சொல்லிவிட்டு நகைச்சுவை இல்லாமல் எப்படி? பிரபல சினிமா காட்சிகளை மையமாகக் கொண்ட நகைச்சுவை படக்கதைகள், காட்டுயிர் நகைச்சுவை ஒளிப்படங்கள், ஓவியர் முத்து, வெங்கியின் நகைச்சுவை துணுக்குகள் அணிவகுத்துள்ளன.
இப்படி அனைத்து வயதினரும் வாசிக்கும் வகையில் கட்டுரைகளை கவனமாகத் தொகுத்துள்ளோம்.
Be the first to rate this book.