ஐம்பதுகளில் மாறிவரும் இந்தியச் சமூகத்தைப் பிரதிபலித்த இயக்குநர் குரு தத். இந்திய திரைப் படங்களின் திசை வழியை உருவாக்கிய மேதைகளுள் ஒருவர். அந்நியப்படுதல் மற்றும் இருத்தலியல் போன்ற கருப்பொருட்கள் மூலம் இந்திய அகத்தின் சங்கடமான யதார்த்தங்களைக் காட்சிப்படுத்தியவர். மிகக் குறைந்த காலமே இயங்கி திரைப் புலத்தில் வலிமையான தடத்தை உருவாக்கிய குரு தத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் தருணமிது. அவரது படைப்புகளில் தேர்ந்த கலை மேதமையின் வலியை ரசிகர்கள் உணர்ந்தனர். அவரது கலையை ஆராதிக்கும் ஒரு செயல்பாடாக வெளிவருகிறது, குருதத் - இருளிடை மலர்ந்த ஒளிப்பூ.
Be the first to rate this book.