ஆரியர்கள் தமிழ்நாட்டில் புகுந்து மெல்ல மெல்லக் கோலாச்சியது தங்களின் எப்படி? அவர்கள் அரசாட்சி செய்தோரை மயக்கித் சொல்லுக்குக் கட்டுப்பட வைத்தது எப்படி? என்பதையெல்லாம அழகிய புனைகதையாக்கியுள்ளது இந்த நாவல்.
முப்பது கிராமங்களையும் ஒரு சிறு நகரத்தையும் தன்னகத்தே கொண்டது பாலோவாரை நகரம். அதை அரசாண்ட பெரியவரசு, தனக்குப் பின் அதை தன் மகன் குலதிலகன் ஆளும்படியும், இருபத்தொரு கிராமங்களை மட்டும் மூத்தவள் பாக்கியத்தம்மாள் ஆளும்படியும் பட்டயம் எழுதி விடுகிறார். அதன்படி இருவரும் ஆண்டுவர, ஆங்காங்கே ஆரியர் நுழைவு இடம் பெற்று, சமண, பௌத்தம் பின்னுக்குத் தள்ளப்பெற்று வருகிறது. அத்தகைய ஆரியக்கூட்டம் பாலாவோரையிலும் காலடி எடுத்து வைக்க குலதிலகன் காரணமாகிறான். கோவில் பணிக்காக உள்நுழைந்த அவர்கள் மெல்ல மெல்ல அதிகாரத்தைக் கைப்பற்ற முனைகின்றனர்.
இதனைக் கண்டு மனம் வருந்தும் சகோதரி பாக்கியத்தம்மாள், ஆரியக் கூட்டத்தை விரட்டி, நாட்டைக் காக்க முனைகிறாள். கத்தியின்றி, இரத்தமின்றி அந்தச் செயலை மேற்கொள்ள அவள் செய்தது என்ன? என்பதை நாவலைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
Be the first to rate this book.