எழுத விரும்பும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பெரிய சவால் “எப்படித் தொடங்குவது?” என்பதுதான். தொடங்கிய பிறகு “எப்படி தொடர்ந்து எழுதுவது?” என்பதும் இன்னொரு சவாலாக மாறிவிடுகிறது. இந்தப் புத்தகம் அந்த இரு பிரச்சனைகளுக்கும் நேரடியானபதில் தருகிறது.
எழுத்தாளருக்கு வரும் மனதளவான தடைகள், பயம், குழப்பம், தன்னம்பிக்கைக் குறைவு, கவனச் சிதறல்—இவை ஏன் வருகிறன? என்று எளிமையாக விளக்குகிறது. தினமும் எழுத உதவும் நடைமுறைப் பயிற்சிகள், ஒரு சின்ன யோசனையைக்கூட முழு எழுத்தாக மாற்றும் வித்தைகள், தவறுகளை ஏற்கும் மனநிலை, எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் போன்ற பல விஷயங்களை இந்தப் புத்தகம் படிப்படியாக எடுத்துக் கூறுகிறது.
எழுதத் துவங்க நினைப்பவருக்கும், பாதியிலே நிற்கிறவருக்கும், எழுதிக் கொண்டிருக்கும்போதும் மனம் உடையும் எழுத்தாளர்களுக்கும் இந்த நூல் ஒரு உறுதியான துணை.
எழுதுவது கடினம் என்றாலும், சரியான வழிகாட்டுதல் இருந்தால் அது மிகவும் சாத்தியமான பயணமாக மாறிவிடும் என்பதை இந்தப் புத்தகம் நமக்கு நம்பிக்கையுடன் சொல்லிக்கொடுக்கிறது.
Be the first to rate this book.