நானூறு பக்கங்களில் ஒரு கதையைச் சொல்வதைவிட அதை நான்கு பக்கங்களில் சொல்பவரையே என்னால் சிறந்த கதைசொல்லியாகக் கருத முடிகிறது. ஜார்ஜ் லூயிஸ் போர்கெஸ் பலநூறு பக்கங்களுக்கான கதைகளை சில நூறு வழிகளில் எழுதிச் சென்றவர். இடாலோ கால்வினோ, அந்த்துவாந் தெ சான் - எச்சுபெரி முதலியோர் குறைந்த பக்கங்களில் மாபெரும் புதினங்களை எழுதிச் சென்றவர்கள்.
தமிழில் இன்று ஒரு புதினம் கவனம் பெற வேண்டுமென்ற அவஸ்தையில் எழுதமுடியாமல் எழுதி எதைஎதையோ உளறிக்கொட்டி நூலாக்கி கொண்டிருக்கும்போது கரிகாலன் குறைந்த பக்கங்களில் ஒரு மாபெரும் புதினத்தைப் படைத்துள்ளார் என்பதை நான் உவகையோடு கூறிக்கொள்கிறேன்.
'எக்ஸ்' ஒரு குறியீட்டுப் புதினம். போலோ கொய்லோ என்ற பிரேசீலிய எழுத்தாளருடைய படைப்புகளைப்போல் கவிதைகளால் ஆக்கப்பட்ட புதினம். ஒவ்வொரு சொல்லும், சொற்களால் ஆன வாக்கியங்களும், வாக்கியங்களால் அமைந்த பத்திகளுமாக, ஒரு மாபெரும் கவித்துவப் பாய்ச்சலை இப்புதினம் நிகழ்த்தியுள்ளது.
இந்திய அரசியல், கல்வியியல், சூழலியல், பாலியல், தலித்தியம், மற்றும் பெண்ணியச் சொல்லாடல்களை மிக மூர்க்கமாக பதிவுசெய்யும் இப்புதினம் மூன்றாம் உலகத் தமிழ்ப் புதினத்தின் ஒரு வகை மாதிரியை உருவாக்கியுள்ளது.
-ரமேஷ் பிரேதன்
Be the first to rate this book.