குழந்தைகளின் உலகிற்குள் எவராலும் எளிதில் நுழைந்துவிட முடியாது. குழந்தைகளின் சிந்தனைகள் எனும் பஞ்சுப் பொதிகளை நம்மால் சுமக்கவே இயலாது. அந்த மகிழ்ச்சியான மழலை உலகின் மந்திரக் கதவுகள் மு.முருகேஷ்-க்கு எப்போதும் திறந்தே இருக்கின்றன.
எளிதில் நம்மை வசப்படுத்திவிடும் எழுத்தும், வேகமாக நம்மை இழுத்துச்செல்லும் நடையும், நிஜமென நம்மை நம்ப வைக்கும் கற்பனை வளமும், ஒவ்வொரு கதைக்குள்ளும் பொதிந்துகிடக்கும் நற்கருத்தும் கதைகளோடு நம்மை எளிதில் கைகுலுக்க வைக்கின்றன. வாசித்து முடித்த பிறகு ஒவ்வொரு கதையும் நம்மை நோக்கி ஒரு சிநேகப் பார்வை பார்ப்பதை உணர முடிகிறது.
சிறார் இலக்கியத்தில் சிகரம் தொடும் கவிஞர் மு.முருகேஷ் அவர்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனமாகப் பல கோடி வாழ்த்துகளைப் பரிசாக வழங்குகிறேன்.
'தமிழ்ச் செம்மல்' கவிஞர் தங்கம் மூர்த்தி
Be the first to rate this book.