காதலைச் சொன்னதற்கு முன்னும் பின்னுமான காலகட்டங்கள் முற்றிலும் வேறானவை. சொல்வதற்கு முன், அங்கோர் இனிய விளையாட்டு இருக்கும். ‘நான் உன்னைக் கவர வருகிறேன், நீ என்னிலிருந்து முடிந்தால் தப்பித்து ஓடு’ என்பதான கண்ணாமூச்சி. ‘உன்னை எவ்வளவு பிடிக்கும்’ என்பதை ஏதேனும் ஒரு வழியில் உணர்த்திக் கொண்டிருக்கும் சாகசம். பூடகங்களால் உண்டான சுவாரஸ்யம். இது ஆண்-பெண் ஈர்ப்பின் பொருளற்ற வடிவமாக இருக்கும் வரை எந்தவொரு பிரச்சனையும் இல்லை. இருவரில் ஒருவர் இதனைக் காதலின் அந்தஸ்த்திற்கு உயர்த்த முயற்சிக்கும்போதுதான் சிக்கல்கள் தொடங்குகின்றன.
- யாத்திரி
Be the first to rate this book.