தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது. இந்தியாவில் குடியரசு உள்ளது உண்மையானால், தமிழ்நாட்டுக்கு அதிக அதிகாரமும், அதிக மான்யமும் கிடைத்திடவேண்டும். தமிழ்நாடு பெயர் மாற்றத்தை எதிர்த்தவர்கள் டில்லியிடம் அதிக அதிகாரம் வேண்டுமென்று நாம் கோரும் பொழுதும் மூர்க்கத்தனமாக எதிர்க்கத்தான் செய்வார்கள். அப்போது நாம் இந்த நன்னாளை மனதிற் கொள்ள வேண்டும். பெயர் மாற்றத்திற்கே இப்படி எதிர்ப்பு இருந்துதானே வெற்றி பெற்றோம் என்று நினைக்கவேண்டும்.
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.