வெ. சாமிநாத சர்மா எழுதிய புகழ்பெற்ற நுல். இது பயண இலக்கியம். தன் வரலாறு, சமகால வரலாறு என்று குறிக்கத்தக்க ஒரு நூல். இது இரண்டாம் உலகப் போரின்போது, பர்மாவை ஜப்பான் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்துவந்த வெ. சாமிநாத சர்மா அகதியாக பல இன்னல்களுக்கு ஆளாகி கால்நடையாகவும். வாகனங்கள் வழியாகவும் சென்னை வந்து சேர்ந்தார். அவர் இந்த நூலில் பர்மாவின் ரங்கூனில் இருந்து புறப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது முதல் அதன்பிறகு 1942 பிப்ரவரியில் பயணத்தைத் தொடங்கி பலவகையில் பயணம்செய்து 1942 மே 14 அன்று சென்னை வந்து சேர்ந்ததுவரையிலான நிகழ்வுகளைப் பற்றி எழுதியுள்ளார்.
Be the first to rate this book.