பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகின் மதிப்புமிக்க தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து ஒரு சிறந்த தலைவருக்கான எடுத்துக்காட்டையே மாற்றியமைத்துள்ளார் இந்திரா நூயி அவர்கள். ஃபார்ச்சூன் 50 தரவரிசையில் இடம்பிடித்த ஒரு நிறுவனத்தை வழிநடத்திய முதல் புலம்பெயர்ந்த வெள்ளையரல்லாத பெண். நமது காலத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். புதுமையான தனித்துவம் வாய்ந்த யோசனைகள், உயர்வை நோக்கிய பயணம் மற்றும் சமூக கடமையுடன் செயல்படுவது என பெப்சி நிறுவனத்தை இவர் முற்றிலுமாக மாற்றியமைத்தார்.
நளினமும், உறுதியும் நகைச்சுவையும் ததும்பும் இந்த நினைவுக் குறிப்பில் தனது அசாதாரணமான வாழ்க்கையைப் பற்றியும் அதற்காக அவர் செய்ய நேர்ந்த தியாகங்கள் பற்றியும் விவரித்துள்ளார். அவரை உருவாக்கிய தருணங்கள், அவரது குழந்தைப்பருவம் மற்றும் 1960 களில் இந்தியாவில் அவர் படித்தது, யேல் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பயின்றது. கார்ப்பரேட் ஆலோசகராகவும் அறிவுரையாளராகவும் இருந்து பின்னர் ஒரு உட்சபட்ச பதவிக்கு முன்னேறியது என அவரது பயணத்தின் ஊடே நம்மை நடத்திச் செல்கிறார். என் வாழ்க்கை பயணம் என்ற இப்புத்தகம் பெப்சி நிறுவனத்தை பற்றிய ஒரு நெருங்கிய கண்ணோட்டத்தை நமக்கு வழங்குகிறது. மேலும் எதிர் வந்த சவால்களை எல்லாம் தகர்த்து அந்த பெயர்பெற்ற அமெரிக்க நிறுவனத்தை ஆரோக்கியமான உணவுகளை தயாரிக்கும் திசையில் திருப்பியது மட்டுமல்லாமல், சுற்றுசூழல் மாசுபாட்டை உருவாக்கும் நிறுவனம் என்ற அந்நிறுவனத்தை பற்றிய பிம்பத்தை மாற்றியதைப் பற்றியும் விவரிக்கிறது.
என் வாழ்க்கை பயணம் என்ற இப்புத்தகம் பெருந்தன்மை, ஆளுமை மற்றும் அனுபவம் நிறைந்த ஒரு தன்னிகரற்ற தலைவரின் வாழ்க்கை கதையாகும். மேலும் அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வித்திட்ட உறவுகளுக்கு சமர்ப்பணமாகவும் இருபத்தியோராம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கான கையேடாகவும் இப்புத்தகம் அமைந்துள்ளது.
Be the first to rate this book.