மகாத்மா காந்தியடிகளின் சுய சரிதமும், சாமிநாதையர் அவர்களுடைய சுய சரிதமும் மக்களுக்குப் பல நீதிகளைப் போதிக்கக் கூடிய செயல்கள் நிறைந்தவை. அவரவர் துறையில் அவர்கள் செய்த அரும்பெரும் முயற்சிகள் அடங்கினவை. அப்படிப்பட்ட அரிய முயற்சிகளில் எல்லாரும் ஈடுபடுவது முடியாது என்றாலும் நித்திய வாழ்க்கைக்கான ஒழுக்க வழக்க உயர்வுகளையாவது உபதேசிக்கத் தக்கவை. ஆதலால் 'சுய சரிதம்' என்று எதையும் எழுதி அதைப் பிறர் படிக்கச் செய்யக்கூடிய உரிமை அப்படிப்பட்ட பெரியவர்களுக்குத்தான் உண்டு என்ற எண்ணத்தால் நான் 'சுய சரிதம்' என்று எழுதத் தயங்கினேன்.
-வெ.இராமலிங்கம் பிள்ளை
Be the first to rate this book.