தர்க்கங்கள் எப்போதுமே தடங்களைக் கண்டடைவதற்கான தக்க வழிகள் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அவை மக்களின் வாழ்வின் பிரதிபலிப்பாக இல்லாவிட்டால் பயனேதும் இல்லை. கருத்துநிலை முரண்பாடுகள் எதுவரை செல்லலாம் என்பதற்கான எல்லை, மக்களது வாழ்வின் எழுச்சி, வீழ்ச்சி, உன்னதங்கள், உலைவுகள், பரிமளிப்புகள், பதற்றங்கள் என்பவற்றை அவற்றுக்கான அழகுடன் எப்படிச் சொல்வது என்பதுவரைதான் செல்ல முடியும் என்ற தெளிவுடன் இருக்கவேண்டும். அந்தத் தெளிவுள்ள சிந்தனைகள் மக்கள் வாழவின் பிரதிபலிப்பாக இலக்கியச் செல்நெறியை தீர்மானிக்கும் சக்தியுடையவையாக நின்று நிலைக்கும்.
Be the first to rate this book.