கொரோனா நோய் பரவலின் உச்சகட்டத்தில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் முதியவர் மகேந்திரன், நண்பனின் தந்தையைக் காப்பாற்றப் போராடும் ராஜீவ், மகேந்திரனைக் கவனித்துக்கொள்ளும் காவ்யா - ஒரே வீட்டுக்குள் வாழும் இம்மூன்று கதைமாந்தர்களைச் சுற்றி நடக்கும் கதை இது.
அறைக்குள் அடைபட்ட மகேந்திரனின் கடந்தகால நினைவுகளில் நிறைந்திருக்கும் அவன் விளையாடிய காந்திபுரத்தின் குறுகிய வீதிகளும், பழகிய மனிதர்களும், பறிகொடுத்த உறவுகளைப் பற்றியதும்தான் இக்கதை.
ஒரு மனிதனின், அவன் குடும்பத்தின், கோயம்புத்தூர் மண்ணின் மாற்றங்களையும், ஏற்ற இறக்கங்களையும் கூறும் இந்நாவல், ஒரு தனிமனிதனின் வாழ்க்கை வழியாக மரணத்தையும் தனிமையையும் பற்றி ஆராய்கிறது.
Be the first to rate this book.