சென்னையில் 21.1.1950 சனிக்கிழமை சால்ட் கொட்டகைக்கு எதிரில் அழகிரி திடலில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் திரு சித்தய்யன் அவர்கள் தலைமையில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு இந்த புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.