மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பொறுப்பில் அமர்த்தப்பட்டே தீர வேண்டும். அது மட்டுமே தமிழ்நாட்டின் நலனைக்காக்கும் வழி. இதை மையப்படுத்தி முரசொலியில் 'திராவிடம் 2.0 ஏன்? எதற்கு?" என்பதை விவரிக்கும் வண்ணம் மீண்டும் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். ஒவ்வொரு முறை திமுக ஆட்சிக்கு வரும்போது தமிழகத்தை மிகப்பெரும் வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வதும், அடுத்து வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழகம் பின்னோக்கிச் செல்வதும் வேதனையின் உச்சம். இம்முறை அது போல் மீண்டும் ஒரு வரலாற்றுப் பிழையை தமிழக மக்கள் செய்து விடக்கூடாது.
Be the first to rate this book.