அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ராசமன்னார் குழு விவரம் கோரி, கருத்துரை கேட்டது. இவற்றின் அடிப்படையில் அக்குழு தனது அறிக்கையை 1971 மே மாதத்தில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்களிடம் அளித்தது.
அறிக்கையையும் அந்த அறிக்கையின் பேரில் கழக அரசின் கருத்தையும் இணைத்து 1974 ஏப்ரல் 16 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் முதல்வர் கலைஞர் அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்து விவாதத்திற்கு வைத்தார். அறிக்கையின்மீது சட்டப் பேரவையில் 5 நாள்கள் விரிவான விவாதம் நடைபெற்று, 1974 ஏப்ரல் 20 அன்று நிறைவேற்றப்பட்டது.
1974 ஏப்ரல் மாதத்தில் கழக அரசால் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட மாநில சுயாட்சி பற்றிய தீர்மானம்தான், இன்று பீறிட்டுக் கிளம்பியுள்ள மத்திய மாநில உறவு குறித்த பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல்வோருக்கு அருந்துணையாக உதவும் பெருமை பெற்றுள்ளது.
Be the first to rate this book.