குமுதினி, குடும்பக் கதைகள் எழுதும்போதே குடும்பத்தின் வழக்கமான தடங்களை மாற்றி எழுதியவர். 'திவான் மகள்' (1946) என்ற நாவலில் இரு வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் காதலிப்பதை எழுதியவர். குழந்தைகளைப் பாத்திரங்களாக வைத்து குமுதினி எழுதியிருக்கும் கதைகளும் மிகவும் நுணுக்கமானவை. குடும்பத்தில் குழந்தைகளின் இருப்பை மனோதத்துவ ரீதியில் பார்க்கும் கதைகளாக அவை இருக்கின்றன.
- அம்பை
Be the first to rate this book.