திண்டுக்கல் என்றவுடன் உங்கள் நினைவுக்கு என்ன வரும்..?
பூட்டு, பிரியாணி, தோல் தொழில், கொடைக்கானல், சிறுமலை... என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வந்தாலும், இன்னும் ஆயிரமாயிரம் அழகான பேசு பொருட்கள் மிச்சம் இருக்கும்.
தமிழக வரலாற்றில் அதிகமாகப் பேச மறந்துபோன மண் திண்டுக்கல்.
ஆயிரம் வரலாற்றுப் புதையல்களை தன்னுள் சுமந்து, தோண்டியெடுக்கக் காத்திருக்கும் மலைக்கோட்டை வளர்த் தெடுத்த நகரம் திண்டுக்கல்...
வரலாற்றுக்குள் இதுவரை வந்திருக்கும் திண்டுக்கல்லின் சில பக்கங்களில்...அழகான சில நினைவுகளைச் சித்திரமாய்த் தீட்டும் முயற்சிதான் இந்தப் புத்தகம்.
'யாதும் நம் ஊரே..." இந்தப் புத்தகம் வாசித்து முடிக்கையில் நீங்கள் திண்டுக்கல் வாசியாகியிருப்பீர்கள்... உங்கள் பால்யத்தின் நினைவுகளில் தவழ்ந்து பார்த்து இருப்பீர்கள்...
நா.கோபாலகிருஷ்ணன்
சொந்த ஊர் திண்டுக்கல், படித்தது இளங்கலை பொறியியல் (CIVIL ENGINEERING). வங்கி மற்றும் நிதித்துறையில் பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர். முன்னணி வீட்டுக்கடன் நிறுவனம் ஒன்றின் தமிழ்நாடு தலைமைப்பொறுப்பில் இருந்தவர். கடந்த ஒன்பது வருடங்களாக, வங்கிகளுக்கான கட்டட மதிப்பீடு மற்றும் கட்டடம் கட்டும் நிறுவனத்தினை திண்டுக்கல்லில் நடத்தி வருகிறார். கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் போட்டித்தேர்வுகள் மற்றும் சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்தும் ஒரு சிறிய நிறுவனத்தின் உரிமையாளர்.
Be the first to rate this book.