பன்னிரு சைவத்திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பது நாம் அறிந்ததே. பக்திச்சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள் தமிழில் சிறந்த இலக்கிய வரிசையில் வைத்து எண்ணிப் போற்றப்பட்டு வருவதும் நாம் அறிந்ததே!
திருவாசகம் மனிதனின் உள்ளத்தில் உள்ள சிற்றியல்புகளைக் கண்டு அவற்றைக் களையும் முறைகளையும் இறையாகிய பரம்பொருளை அடைய விரும்புகின்றவர்கள் மேற்கொள்ள வேண்டிய பேரியல்புகளையும், அதன் ஒவ்வொரு படிநிலைகளையும் விவரித்துக்கூறுகிறது.
Be the first to rate this book.