ஜோசெப் அலைக்ஸ் முனைவர் பட்டம் முடிப்பது அனைவருக்கும் பெருமை தேடித்தரும் சாதனையாகிறது. தேவ கிராம மாணவர்களைப் படி என்று கட்டாயப் படுத்திய காலம் உண்டு. இன்று மாணவர்களே முன்வந்து தமது கல்வியில் முன்னேறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜோசெப் அலைக்ஸ் முனைவர் நிலை அடைந்து தமது மக்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் ஏனைய மாணவர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வார்.
-பேரருட்திரு கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு ஏற்ப இலங்கையின் ஒரு பகுதி கிராமத்தின் வரலாற்றை எடுத்துரைப்பதின் மூலமாக ஆசிய கிராமிய வாழ்வியலை முனைவர் பட்ட ஆய்வாளர் ஜோசெப் அலைக்ஸ் எடுத்துரைக்க முயன்றுள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். சிறந்த ஆய்வாளராகவும் எழுத்தாளராகவும் வளர்ந்து வர அவருக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.
-முனைவர் க. ஜெயபாலன்
Be the first to rate this book.