எப்போதெல்லாம் மழை வந்து போகிறதோ அப்போதெல்லாம் ஒரு மழைக்காலத்தின் நினைவுகள் நம்மை தொற்றிக்கொள்ளும். எப்போதோ விரல்களில் படிந்து கிடந்த ஒரு துளி நம்மை மழையின் தடத்திற்கு கூட்டிச்செல்லும்.அந்த ஈரத்திற்கு உலர்வே இல்லை, அது ஒரு நியாபகம். அப்படித்தான் அன்பினியின் கவிதைகளும் நம்மை எப்போதும் அந்த ஒரு மழைக்காலத்திற்கு கூட்டிச்செல்லும்.
ஒரு சின்னஞ்சிறிய இலையை தன் வாயில் பற்றி நம்மை சுற்றிப் பறந்து கொண்டிருக்கும் பறவை அது.
அன்பினியின் கவிதைகள் எப்போதும் அன்பில் திளைத்திருக்க நிறைய அன்புகளுடன்…
– கவிஞன் மொழி
Be the first to rate this book.